• Sep 20 2024

"அது வேற வாய், இது வேற வாயா?"..நடிகை ஷீலாவைக் கண்டிக்கும் ரசிகர்கள்

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'டூல்ட்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஷீலா. இப்படம் சினிமாவில் இவருக்கு ஒரு அறிமுகத்தைக் கொடுத்திருந்தாலும், இவரை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது என்னவோ திரௌபதி' என்ற படம் தான். எனினும் இப்படம் வெளியான நாளில் இருந்து இவர் பல சர்ச்சைகளில் சிக்கி வருகின்றார்.

அதாவது ஷீலா வழமையாகவே சமூக அக்கறை கொண்ட படங்களில் மட்டும் தான் நடித்து வருவார். இவ்வாறு இருக்கும் போது இவர் 'திரௌபதி' படத்தில் நடித்திருந்தமையினால் பலரும் இது குறித்த கேள்வியினை எழுப்பியிருக்கின்றனர். இது தொடர்பாக சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் இவரிடம் வினவியுள்ளனர்.

இதற்குப் பதிலளித்த நடிகை ஷீலா "திரௌபதி தற்போது வரை எனக்கு ஒரு கெட்ட கனவாகவே இருக்கிறது. ஒரு படத்தில் நடிக்கும் முன்னர் அதைப்பற்றி அனைத்து தகவலும் தெரிந்தால் தான் என்னால் முடிவெடுக்க முடியும். ஆனால் 'திரௌபதி' படம் குறித்து எனக்கு எந்தத் தகவலுமே தெளிவாக கூறப்படவில்லை. எனக்கு அரசியல் தெரியாது, அதுமட்டுமல்ல எனக்கு அரசியல் பொருந்தவும் செய்யாது. என்னோட வேலையை நான் சரியாக செய்ய வேண்டும் என்று மட்டும் தான் நினைப்பேன். ஆனால் திரௌபதி படத்தை பொறுத்தவரையில் எனக்கு சில விவரங்கள் படக்குழுவினரால் சரியாக பகிரப்படவில்லை" எனக் கூறியுள்ளார்.

இவ்வாறு ஷீலா ராஜ்குமார் கூறிய வீடியோவை பார்த்த ரசிகர்கள் "அது வேற வாய், இது வேற வாயா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளதோடு அந்த வீடியோவையும் பகிர்ந்து அவரைக் கண்டித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement