தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாகவும் லேடி சூப்பர் ஸ்டாராகவும் இருப்பவர் தான் நடிகை நயன் தாரா.மலையாள நடிகையான இவர் தமிழில் ஐயா என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார். தொடர்ந்து ரஜினியுடன் சந்திரமுகி திரைப்படத்தில் நடித்தார்.
இத் திரைப்படம் இவருடைய கெரியரில் திருப்பு முனையாக அமைந்ததோடு பல படவாய்ப்புக்களையும் பெற்றுக் கொடுத்தது.இதனால் தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வந்தார்.தற்போது 10 கோடி சம்பளம் வாங்கும் டாப் நடிகையாக திகழ்ந்து வருகிறார்.
மேலும் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வரும் நயன் கிட்டத்தட்ட 10 படம் வரை கமிட்டாகி நடித்து வருகிறார்.இவர் வாடகைத் தாய் முறை மூலம் அண்மையில் இரட்டை ஆண்குழந்தைகளைப் பெற்றார்.
திருமணத்திற்கு பிறகு நடிப்பில் ஆர்வம் கொண்டு தன்னுடைய இடத்தில் நிலைத்து வரும் நடிகை நயன் தாராவின் பள்ளிப்பருவத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருவதைக் காணலாம்.
Listen News!