நடிகர் கமல்ஹாசன் - சரிகா தம்பதியரின் மூத்த வாரிசு ஸ்ருதிஹாசன். 2009ல் 'லக்' எனும் ஹிந்தி படத்தில் நடிகையாக திரையுலகில் அறிமுகமானார்.
சூர்யா நடிப்பில் வெளியான 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் தமிழிலும் நடிகையாக அறிமுகமானது அவருக்கு பெரும் திருப்பத்தை கொடுத்திருந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் நடித்து வரும் ஸ்ருதி சினிமாவிற்கு வந்து 13ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இதற்காக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில் ஸ்ருதி தெரிவிக்கையில் , ''திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி பதிமூன்று ஆண்டுகளை அற்புதமான ஆண்டுகளாக நிறைவு செய்திருக்கிறேன். வாழ்நாள் முழுவதும் ரசிகர்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டே இந்த பதிமூன்று ஆண்டு நிறைவை உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன்.
மேலும் என்னுடைய திரையுலக வாழ்க்கை ஒரு மாயாஜாலமிக்கது. திரைப்படத்தில் நடிப்பேன் என்று ஒருபோதும் நான் எதிர்பார்க்கவில்லை. ஏதேனும் எனக்கு விருப்பமான துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருந்தது. அதே தருணத்தில் எனக்கு விருப்பமான வேலையை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டேன்.
மாயாஜாலம் மிக்கதாக கடந்த 13 ஆண்டுகள் கழிந்தது. ஒரே ஒரு படத்தில் தான் நடிப்பேன் என நினைத்திருந்தேன். அதே தருணத்தில் நான் நடிகையாக இருக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லை. பின்னர் அதனை நேசிக்க கற்றுக் கொண்டேன். சினிமா என் வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியாக மாறியுள்ளது. இதற்கு நான் உண்மையில் நன்றி உள்ளவளாக இருக்கும் வகையில் வாழ்க்கை என்னை மாற்றி அமைத்திருக்கிறது.
வெற்றி, தோல்விகளை எப்படி எதிர்கொள்வது என்பதையும், நம்பிக்கையுடன் எப்படி பணியாற்றுவது என்பதையும், கதைகளை கேட்பதிலும், அதனை தேர்ந்தெடுப்பதிலும் அதிலுள்ள நேர்மறையான விசயங்களை பாராட்டுவது எப்படி என்பதனையும் கற்றுக் கொண்டேன். மேலும் இதனை இதற்கு முன் கற்றுக் கொண்டதில்லை. எனக்கு கிடைத்து வரும் அன்பு மற்றும் பாராட்டிற்கு நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன். பதிமூன்று ஆண்டுகளாக என் மீது மாறாத அன்பு காட்டி வரும் அனைவருக்கும் என்னுடைய பணிவான நன்றி நன்றி நன்றி.'' என தெரிவித்திருக்கிறார்.
பிற செய்திகள்
- நீங்களா அதுக்கு காசு குடுத்தீங்க…ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த குஷ்பூ
- நயன்தாரா குறித்து சர்ச்சையை கிளப்பிய பிரபல நடிகர்–கொந்தளிக்கும் ரசிகர்கள்..!
- இயக்குநர் ஷங்கர் பட பெயரில் நடந்த மோசடி…நடந்தது என்ன..?
- சீரியலில் மட்டும் தான் அடக்கம்-கவர்ச்சியில் அதகளம் காட்டும் ப்ரியங்கா குமார்..!
- பிள்ளை மீது சத்தியம் செய்து உண்மைகளை சொன்ன ராதிகா.. பாக்கியா எடுத்த முடிவு – இன்றைய எபிசோட்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!