விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவர் தான் ரித்திகா. இதனைத் தொடர்ந்தும் சில நிகழ்ச்சிகளில் பங்குபற்றி வந்தார். குறிப்பாக குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபற்றி ரசிகர்களைக் கவர்ந்தார்.
இதனை அடுத்து தற்பொழுது விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.இதில் திருமணம் ஆகி குழந்தை பெற்று கணவரை இழந்த பெண் என்னும் கதாப்பாத்திரத்திலே தான் நடித்து வருகின்றார்.
இவ்வாறு இருக்கையில் இவருக்கு கடந்த மாதம் வினு என்பவருடன் காதல் திருமணம் நடைபெற்றது. அனைவருமே அவருக்கு திருமண வாழ்த்து கூறினார்கள், சமீபத்தில் மாலத்தீவுக்கு ஹனிமூன் சென்றிருந்தார் ரித்திகா.அங்கு எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்தார்.
தற்போது வீடியோவுடன் ஒரு குட் நியூஸ் கூறியுள்ளார், ஆனால் நீங்கள் நினைத்தது போல் கர்ப்பம் இல்லை.அவர் மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க வந்துவிட்டாராம், அவருக்கு பதில் வேறொருவர் நடிப்பார் என கூறப்பட்ட நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவர் வீடியோ வெளியிட ரசிகர்கள் குஷியில் கமெண்ட் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!