இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ் சினிமாவில் பணியாற்றும் லைட் மேன்களுக்கு உதவும் வகையில் 'wings of life' இசை நிகழ்ச்சியை நடாத்தி இருந்தார். இதில் பல பிரபலங்களும் கலந்து கொண்டு அவருக்கு பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.
அந்தவகையில் "ரஹ்மான் இப்படி ஒரு மகத்தான பணியை செய்வது எமக்கெல்லாம் ரொம்பப் பெருமையாக இருக்கின்றது. அதனை நாம் மனப்பூர்வமாக பாராட்டுகின்றோம், இவரை ஒரு முன்னுதாரணமாக வைத்துக் கொண்டு சினிமாத்துறையில் உள்ளவர்கள் சினிமா சார்பாக உள்ள தொழிலாரக்ள, நலிந்தவர்களுக்கு கட்டாயம் உதவி செய்ய வேண்டும். அவர்கள் வாழ்க்கையில் ஓர் நம்பிக்கையை ஏற்படுத்துதல் வேண்டும்" என அங்கு கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் தெரிவித்திருந்தனர்.
அதேபோல் அந்நிகழ்வில் கலந்து கொண்ட 'பத்து தல' பட இயக்குநர் கிருஷ்ணா பேசுகையில் "சமீபத்தில் நடந்த விபத்து அவரை ரொம்பவே பாதிச்சிருக்கு, அதனால் அவர் மனதளவில் நிறைய பாதிக்கப்பட்டிருந்தார். அதற்காக இப்படி ஒரு இசை நிகழ்ச்சியை தயார் செய்து, அதோட லான்ச்சை எனது 'பத்து தல' படத்தில் சிம்புவை வைத்துப் பண்ணியது எனக்கு ரொம்பவே பெருமையாக இருக்கு" என்றார்.
அதுமட்டுமல்லாது "ரஹ்மான் சாரின் நல்ல மனசிற்கு எல்லாமே நல்லது தான் நடக்கும்" எனவும் கூறி அவரை வாழ்த்தி சென்றார் இயக்குநர் கிருஷ்ணா.
Listen News!