நடிகை கங்கனா ரனாவத், இந்தி பட உலகில் முன்னணி நடிகை, பெண்களை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் என்றே சொல்ல வேண்டும்.
அந்தவகையில் இவர், சிறந்த நடிப்பிற்காக நான்கு தேசிய விருதுகளை வென்றதன் மூலம் இந்தியா முழுவது அறியப்பட்டவர்.2008 ஆம் ஆண்டு வெளியான 'தாம் தூம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.'தலைவி' படத்தில் மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டுக்களையும் பெற்றார்.
கடைசியாக கங்கனா ரனாவத், ஸ்பை ஆக்ஷன் த்ரில்லர் படமான 'தாகத்' படத்தில் நடித்து இருந்தார். தனது அடுத்த படமான எமர்ஜென்சி படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியாக நடிக்கிறார். இந்த எமர்ஜென்சி படத்தை கங்கனா ரனாவத்தே இயக்குகிறார். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தமிழில் பி. வாசு இயக்கத்தில் சந்திரமுகி-2 படத்திலும் கங்கனா ரனாவத் நடித்து வருகிறார். ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா, மனோபாலா, ரவி மரியா என நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள் . ராஜசேகர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வருகிறார். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
இந்நிலையில் கங்கனா ரனாவத், தமது டிவிட்டர் பக்கத்தில் பேட்டி ஒன்றில் ஜோதிகா அளித்த ஒரு பேட்டியை பகிர்ந்து ட்வீட் செய்துள்ளார்.
அந்த வீடியோவில் நெறியாளர் ஜோதிகாவிடம் ‘பாலிவுட்டில் உங்களுக்கு பிடித்த நடிகை யார்? என கேட்கிறார். இந்த கேள்விக்கு நடிகை ஜோதிகா ‘கங்கனா ரனாவத்’ என பதில் அளிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்து “இது எனக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. தினம் தோறும் சந்திரமுகி படத்தில் ஜோதிகாவின் ஆகச்சிறந்த நடிப்பை பார்த்து வருகிறேன்.
ஏனெனில், சந்திரமுகி-2 படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை தற்போது படமாக்கி வருகிறோம். சந்திரமுகி முதல் பாகத்தில் ஜோதிகாவின் நடிப்பு வியப்பளிக்கிறது. அவருடைய அதிச் சிறந்த நடிப்பை ஈடு செய்துவது என்பது சாத்தியமற்றது” என கங்கனா ரனாவத் ட்வீட் செய்து பகிர்ந்துள்ளார்.இது தற்போது வைரலாகி வருகின்றது.
Listen News!