தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்னும் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் அட்லி. இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான தெறி மெர்சல் பிகில் போன்ற படங்களை இயக்கியிருந்தார்.இப்படங்கள் வெற்றிப் படங்களாகவும் அமைந்தன.
தொடர்ந்து தற்போது ஷாருக்கான் நடிக்கும்"ஜவான் " படத்தை அட்லி இயக்கி வருகிறார். இயக்கம் மட்டுமல்லாம் தனது மனைவி பிரியா அட்லியுடன் இணைந்து 'A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தயாரிப்பாளராகவும் இருந்தத வருகின்றார்.
இவர் தனது காதல் மனைவி பிரியாவை கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 9-ம் தேதி கரம்பிடித்தார். தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடந்தது.
இந்த நிலையில் அட்லி மற்றும் பிரியா அட்லி இருவரும் பெற்றோர்கள் ஆக போகிறார்கள் என்ற செய்தியை அதிகாரப்பூர்வமாக பிரத்யேக ஃபோட்டோ ஷூட் நடத்தி அறிவித்துள்ளனர்.
"சந்தோசத்தின் குவியலை தரப்போகும் அழகிய மழலையின் தருணங்களை இவ்வுலகிற்கு கொண்டு வரபோவதை எண்ணி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அந்த தருணத்தை காண நாங்கள் ஆவலாய் காத்து கொண்டு இருக்கிறோம். " என அட்லி & பிரியா அட்லி தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
இந்த பதிவை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து, "பார்க்கவே மிகவும் அழகாக இருக்கிறது. எப்பொழுதும் பரிபூரண ஆசிர்வாதத்துடன் இருங்கள்" என விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!