• Sep 20 2024

அப்பாவாகிட்டேனு இன்னும் சிங்க் ஆகல: விக்னேஷ் சிவன் பகிர்ந்த விடயம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இரட்டை ஆண் குழந்தைகளின் வருகைக்கு பின்னர்  ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் பற்றி பேசியிருக்கிறார் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் 9ம் தேதி  இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. இதையடுத்து தானும், நயன்தாராவும் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியிருப்பதாக அக்டோபர் மாதம் 9ம் தேதி புகைப்படங்களுடன் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டார் விக்னேஷ் சிவன். நயன்தாரா வாடகைத் தாய் மூலம் தாயானது பெரும் சர்ச்சையானது.

தந்தையானது குறித்து பேட்டன்றில் விக்னேஷ் சிவன் கூறியிருப்பதாவது, தந்தையானதை இன்னும் நம்ப முடியவில்லை. கனவு போன்று இருக்கிறது. மேலும் இது கடவுளின் ஆசிர்வாதம். நான் தந்தையாகிவிட்டேன் என்பதே இன்னும் முழுவதுமாக சிங்க் ஆகவில்லை. குழந்தைகளுடன் இருப்பது சந்தோஷமாக உள்ளது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு நேரம் குழந்தைகளுடன் இருக்கிறேன் என்று கூறினார்.

நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருமணமான கையோடு வாடகைத் தாய் மூலம் பெற்றோர் ஆனது குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு தனிக்குழு அமைத்தது. தாங்கள் ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பதிவுத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறி சான்றிதழை சமர்பித்தார்கள். அத்தோடு வாடகைத் தாய் தங்களின் நெருங்கிய உறவினர் தான் என அரசிடம் விளக்கம் அளித்தார்கள். அதன் பிறகே அந்த சர்ச்சை அடங்கியது.

கெரியரை பொறுத்தவரை தனக்கு பிடித்த நடிகரான அஜித் குமாரை வைத்து ஏ.கே. 62 படத்தை இயக்கவிருக்கிறார் விக்னேஷ் சிவன்.அத்தோடு  பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர் படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளார். மேலும் அந்த படத்தில் நயன்தாரா தான் ஹீரோயின் என்று முதலில் சொல்லப்பட்டது. அத்தோடு பிள்ளைகள் வர அடுத்து நயன்தாராவுக்கு பதில் த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கனெக்ட் படம் டிசம்பர் 22ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. படத்தை தங்களின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்துள்ளனர் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும். நயன்தாராவின் படத்தில் இடைவேளையே கிடையாது. எனினும் தற்போது படத்தை விளம்பரம் செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.

கனெக்ட் படத்தில் நயன்தாராவின் கதாபாத்திரம் மட்டும் அல்ல லுக்கும் வித்தியாசமாக உள்ளது. மேலும் அவரின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்து. நயன்தாரா மிகவும் வயதானவர் போன்று அந்த புகைப்படத்தில் இருந்தார். எனினும் அதை பார்த்து நிஜத்தில் தான் அவர் அப்படியாகிவிட்டாரோ என்று பலரும் பேசினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement