சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் விரைவில் வெளிவர இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ரஜினியின் 170 ஆவது திரைப்படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படம் உருவாக இருக்கிறது. அதற்காக இந்த படத்திற்கு தேவையான அனைத்து முக்கிய கதாபாத்திரங்களையும் தெரிவு செய்து இருக்கிறார்.
ரஜினி இவரது மகளின் மேல் இருந்த நம்பிக்கையால் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். ஆனால் இந்த படத்தை ஒப்புக் கொண்ட இவர் இன்னும் இந்த படத்திற்கான கதையை புரியாமல் குழம்பி வருகிறார் என்று சொல்லபப்டுகிறது.
அதனால் இந்த படத்திற்கான அனைத்து வேலைகளையும் ஐஸ்வர்யா மாத்திரம் தான் எடுத்து போட்டு செய்கிறார். அதனால் மிகவும் டென்ஷனாக பட வேலைகளை பார்த்து வருகிறார். இந்த டென்ஷன் காரணமாக சில பிரச்சினைகளையும் செய்து வருகிறார்.
அது மட்டுமல்லாமல் எந்த ஒரு விஷயமும் ததனியாகவே முடிவெடுத்து செயல்படுகிறார். இதனால் படப்புழு மிகவும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.
இது மட்டுமல்லாமல் ஐஸ்வர்யா மற்றவர்களை மதிக்க மாட்டங்கிறார். இந்த மாதிரி இவரின் செயல்கள் இருப்பதால் ரஜினிக்கு பெரிய தலைவலியாய் மாறி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து லால் சலாம் படம் சூட்டிங் ஆரம்பிப்பதற்கு முன்பே இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கிய பிரபலங்கள் நிறைய பேர் இந்த ப்ராஜெக்ட் இல் இருந்து விலகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த படத்தின் காஸ்டியூம் டிசைனர் மற்றும் ஐஸ்வர்யாராயின் நண்பர் ஒருவர் இவரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விலகி உள்ளார்.
மேலும் இவரின் இந்த மாதிரியான செயல்களை அவர் மாற்றிக் கொள்ளாவிட்டால் விஷ்ணு விஷால் கூட இந்த படத்தில் இருந்து விலக வாய்ப்பு உள்ளது என்றும் எதிர்பாக்கப்படுகிறது.
ஐஸ்வர்யாவின் நடவடிக்கைகளை பார்த்து வேறு வழி இல்லாமல் அனைத்தையும் ரஜினி பார்த்தும் பார்க்காத மாதிரி மகளுக்காக ரண வேதனையை அனுபவித்து வருகிறார் என்பது தெரிய வருகிறது.
Listen News!