தமிழ் சினிமாவில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் பிரதீப் ரங்கநாதன்.இந்த கோமாளி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து லவ் டுடே என்ற படத்தை இயக்கி அதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான இப்படத்தில் இவானா, ராதிகா சரத்குமார், சத்யராஜ், யோகி பாபு, ரவீனா ரவி, விஜய் வரதராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். காதல் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருக்கிறது.
இந்த நிலையில் இயக்குநர் பிரதீப் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலக தலைவன்’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று இருந்தார். மற்றும் அருண் ராஜா காமராஜ், மிஸ்கின் மாறி செல்வராஜ், போன்ற பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பிரதீப் பேசும் போது அரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்தார்கள். இதனால் கொஞ்சம் பதறிய பிரதீப் ‘மாட்டி விட்றாதீங்க போதும், இப்போதுதான் ஆரம்பித்து இருக்கிறேன், முடித்து விடாதீர்கள் என்று தன்னுடைய பாணியில் ரசிகர்களிடம் கூறினார். ஒரு அறிமுக ஹீரோ பிரதீப்பிற்கு எவ்வளவு ஆரவாரம் கிடைப்பதை பார்த்து மேடையில் அமர்ந்திருந்த மிஷ்கின் மாரி செல்வராஜ் ஆகியோர் ஒரு கணம் வியந்து போனார்கள்’என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!