• Sep 20 2024

'ஜெய்பீம்' படத்திற்கு ஒரு விருது கூட இல்லையா..? இதயம் நொருங்கிப் போன பிரபல நடிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

2021 ஆம் ஆண்டில் வெளியான படங்களுக்கான, 69வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் சினிமாவில் சிறந்த கல்வி திரைப்படமாகஇயக்குநர் பி.லெனினின் 'சிற்பிகளின் சிற்பங்கள்' படமும்,  கடைசி விவசாயி படத்தில் நடித்த மறைந்த விவசாயி நல்லாண்டிக்கு சிறப்பு விருதும் அறிவிக்கப்பட்டது. இதேபோல் தமிழில் சிறந்த படமாக கடைசி விவசாயி தேர்வு செய்யப்பட்டுள்ளது.


இப்படியான நிலையில் விருதினை வாரிக் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஒரு சில படங்களுக்கு ஒரு விருது கூடக் கிடைக்கவில்லை. அதில் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' திரைப்படமும் ஒன்று. அதாவது இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சூர்யாவுடன் மணிகண்டன், லிஜோ மோல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர்.

1993-ஆம் ஆண்டு விழுப்புரத்தில் இருளர் பழங்குடியின மக்களுக்கு எதிராக நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. 


இந்நிலையில் இப்படத்திற்கு ஒரு விருது கூட கிடைக்காதமையினால் மனம் உடைந்த பிரபல தெலுங்கு நடிகர் நானியும் தன் ஆதங்கத்தை சமூக வலைதள பக்கங்களில் வெளிப்படுத்தி இருக்கிறார். அதாவது ஜெய் பீம் என ஹேஷ்டேக் போட்டு இதயம் நொருங்கிப் போன எமோஜி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். 


Advertisement

Advertisement