விஷால், ரீமா சென், ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் திமிரு. இந்தப் படத்தில் ஸ்ரேயா ரெட்டிக்கு பக்கபலமாக லொடுக்கு என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார் விநாயகன்.
திமிரு படமே விநாயகனின் அறிமுகப்படமாக அமைந்தது. இதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்த படத்தில் ஊனமுற்றவராக நடித்திருப்பார். இதனை அடுத்து சிலம்பாட்டம் மற்றும் காளை, சிறுத்தை, மரியான் போன்ற படங்களில் நடித்திருக்கின்றார்.
மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் அண்மையில் வெளியாகிய ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து ஏராளமான ரசிகர்களைக் கவர்ந்தார்.இப்படத்தின் மூலம் இவருக்கு தொடர்ந்து படவாய்ப்புக்களும் குவிந்து கொண்டே இருக்கின்றது.
சில வருடங்களுக்கு முன்பு மாடல் அழகி மிருதுளாதேவி என்பவர் விநாயகன் மீது பரபரப்பு குற்றம்சாட்டினார்.அதில் அவர், என்னையும் அம்மாவையும் விநாயகன் படுக்கைக்கு அழைத்தார் பாலியல் ரீதியாக சொந்தரவு செய்கிறார் என்று புகார் அளித்திருந்தார். இதையடுத்து போலீசார் விநாயகனை கைது செய்து விசாரணை செய்தனர்.
அப்போது விநாயகன், நடிகையையும் அவரது அம்மாவையும் படுக்கைக்கு அழைத்ததை ஒத்துக்கொண்டார்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!