இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான 'பீஸ்ட்' திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாத நிலையில், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதோடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்தை இந்த வருட தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வரும் பிரபல நடிகர் நெல்சன் திலீப் குமாருக்கு ஆச்சரிய பரிசு ஒன்றை கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மிகவும் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் நெல்சன் திலீப் குமாருக்கு கொடுத்துள்ளார். இந்த தகவலை, ஜாக்கி ஷெரீப்புக்கு நன்றி தெரிவித்து, வண்டியில் அமர்ந்தபடி எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ஜெயிலர் படத்தை அண்ணாத்த படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். விரைவில் இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் கார்த்திருக்கின்றனர்.
Listen News!