• Sep 20 2024

ஜனனி ஒரு யானை.. தனலட்சுமி ஒரு விஷப்பாம்பு.. நல்ல வேளை நரிக்கூட்டத்தில் இருந்து தப்பி வந்திட்டேன்; ராபர்ட் மாஸ்டர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6இல் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தவர் ராபர்ட் மாஸ்டர். இவர் அங்கிருந்த அனைத்து போட்டியாளர்களையும் 'டார்லிங் ...டார்லிங்' என்று அழைத்து அவர்களின் மனதில் இடம் பிடித்தார். 

அதுமட்டுமல்லாது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்ததுமே ரச்சித்தாவிற்கு ரூட்டுவிட்ட ராபர்ட் மாஸ்டர், அவரின் பின்னாலே சுற்றிக்கொண்டிருந்தார். இதனால் கடந்த வாரம் ஓப்பன் நாமினேஷனில் சிக்கிய மாஸ்டர் குறைந்த வாக்குகளை பெற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். 


மேலும் ராபர்ட் மாஸ்டர் மிகவும் ஸ்ட்ராங்கான போட்டியாளர்களில் ஒருவர் என கருதிய ரசிகர்களுக்கு, அவர் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல், ரச்சித்தாவின் பின்னால் சுற்றி கெடுத்துக்கொண்டமை சற்று வருத்தத்தைக் கொடுத்தது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ராபர்ட் மாஸ்டர் பல பேட்டிகளை அளித்து வருகின்றார். இவ்வாறு சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டியில், எப்படியோ நரி கூட்டத்திலிருந்து வெளியே வந்துவிட்டேன் எனக் கூறி இருக்கின்றார். அந்த வகையில் ஒவ்வொரு போட்டியாளர்களையும் மிருகங்களுடன் ஒப்பிட்டு இவரிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. 


அக்கேள்விகளுக்கு மிகவும் சுவாரசியமாக பதில் அளித்தார் ராபர்ட் மாஸ்டர். அந்தவகையில் விஷம் உள்ள பாம்பு தனலட்சுமி, விஷம் இல்லாத பாம்பு ஷிவின், கழுகு அசீம், புலி மணி, யானை ஜனனி, முயல் ஏடிகே, முதலை விக்ரம், சிங்கம் போல வீட்டில் யாரும் இல்லை, கமல் சார் மட்டும் தான் சிங்கம் என்றார்.

அத்தோடு ரச்சித்தாவை என்ன என்று சொல்லவில்லையே என செய்தியாளர்கள் அவரிடம் கேட்க, அவங்களை பத்தி கேட்காதீங்க ப்ளீஸ் என்றார். மேலும் தனக்குப் பிடித்த போட்டியாளர்கள் அமுதவாணன், ரச்சித்தா, ஷிவின் என்றார். அதுமட்டுமல்லாது பிடிக்காதவர்கள் அசீம், தனலட்சுமி, ஜனனி அவங்ககிட்ட நான் கொஞ்சம் தள்ளியே இருப்பேன் என்றார். 

இவ்வாறாக பல கேள்விகளுக்குப் பதிலளித்த அவர் திங்கள் முதல் வியாழன் வரை வீட்டில் ஒரே சண்டையாக இருக்கும், ஆனால் வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அனைவரும் அப்படியே அமைதியாகி விடுவார்கள் எனவும் கூறி இருக்கின்றார்.

Advertisement

Advertisement