சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இதில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் பட்டமாளின் 40% ஷேர் தற்போது ஜீவானந்தம் பேருக்கு மாறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.
இந்நிலையில் தற்போது ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது. அதில் குணசேகரன் "யார்டா அந்த ஜீவானந்தம், என் மொத்த சொத்துக்கும் எமனாக வந்து நிக்கிறான், திடுதிடுப்பாக எங்கிருந்தோ வந்து என்னைத் தூக்கிச் சாப்பிடலாம் என்று நினைக்கிறானா, இந்த குணசேகரன் யார் என்று காட்டுறேன்" எனக் கூறுகின்றார்.
பின்னர் தன்னுடைய மெடிக்கல் எக்விப்மென்ட் கம்பெனிக்கு சென்ற குணசேகரன், கதிர், ஞானம் அங்குள்ள ஜீவானந்தம் ஆட்களை அடிக்கின்றனர். மறுபுறம் ஜனனி "நாளும் குணசேகரன் மாமாவோட ஆள் என்று நினைச்சிட்டு இருந்தேன், ஆனால் நடக்கிறது எல்லாமே ஒரே புதிராக இருக்கிறது, அப்போ உண்மையிலே ஜீவானந்தம் யாரு, இவருக்கும் அப்பாத்தாவிற்கும் என்ன சம்மந்தம்" எனக்கேட்டு குழப்பத்தில் இருக்கின்றார்.
Listen News!