விஜய் டிவியில் முடிவு கட்டத்தை எட்டியுள்ள சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த சீரியல் முடியப் போவதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த சீரியலுக்கான ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஜனார்த்தனனை ஹாஸ்பிட்டலில் இருந்து வீட்டுக்கு கூட்டிட்டு போவதற்கு பில் கட்ட பணம் இல்லாததால் மீனாவின் அம்மா நகைகளை வைத்து கட்டிடலாம் என்கின்றார்.
அப்போது ஜீவா வந்து பில்லைகொடுங்க நான் கட்டுறேன் என்று பில்லை வாங்கி கட்டுவதோடு கதிர், ஜீவா இருவருமே ஜனார்த்தனனை வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றனர்.
இதனால் மனம் மாறிய ஜனார்த்தனன், மூர்த்தியிடம் உங்க தம்பிங்க இரண்டு பேரையும் நல்ல வளர்த்திருக்கிறீங்க என்று சொல்கின்றார். இதனால் எல்லோரும் சந்தோசப்படுகின்றனர். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.
Listen News!