• Sep 20 2024

ஜீவாவை மட்டம் தட்டிப் பேசிய ஜனார்த்தனன்- கோபித்துக் கொண்டு கிளம்பிய மீனா- கதிர் எடுத்த முடிவு-Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

மீனாவின் தங்கையின் கணவர் 25 லட்சம் பணத்தை வைத்து பிஸ்னஸ் ஸ்ராட் பண்ணப் போவதாக சொல்ல ஜீவா அதெல்லாம் வேண்டாம் புது பிஸ்னஸிற்காக 25 லட்சம் எல்லாம் போடக்கூடாது என்று சொல்கின்றார். அப்போது மீனாவின் அப்பா ஜீவாவை மட்டம் தட்டிப் பேச மீனா கோபத்தில் ஜீவாவை உள்ளே கூட்டிக் கொண்டு போகின்றார்.


தொடர்ந்து வீட்டுக்கு வரும் மூர்த்தியும் கதிரும் எல்லோரிடமும் ஒரு குட் நியூஸ் சொல்கின்றனர். அதவது புதன் கிழமை புதுவீட்டுக்கு கிரகப் பிரவேசம் செய்யப்போறோம் என்று சொன்னதும் தனம் ஐஸ்வர்யா கண்ணன் எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர்.பின்னர் கண்ணன் குழந்தைவை வைததுக் கொஞ்சிட்டு இருக்கும் போது முல்லை வந்து கண்னை நக்கலடிக்கின்றார்.

தெடர்ந்து ஐஸ்வர்யாவின் குரல் எங்கையோ கேட்குது இவ வீடியோ பண்ணுறாளா என்று ஐஸ்வர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஐஸ்வர்யாவைப் போய் திட்டுகின்றார்.ஏதாவது பிரச்சினை பண்ணிட்டு தான் இருப்பியா சும்மா இருக்கமாட்டியா என்று சொல்ல, ஐஸ்வர்யா உன் போன்ல வீடியோ பண்ணாத என்று திட்டுகின்றார்.

பின்னர் தங்களது வீட்டுக்கு மீனாவும் ஜீவாவும் கிளம்பும் நேரத்தில் கதிர் வீட்டிற்கு வந்து நான் சமைக்கப்போகினறேன். எல்லோரும் இருந்து டிவியைப் பாருங்க என்று சொல்லி விட்டு தான் சமைக்க போகின்றார். அப்போது எல்லோரும் டிவியைில் ராஜா ராணி திரைப்படத்தைப் பார்க்க கதிர் தனியாக சமைத்து விட்டு எல்லோருக்கும் பரிமாறுகின்றார்.


அதனைத் தொடர்ந்து வீட்டுக்கு வரும் ஜீவா மற்றும் மீனாவிடம் கிரகப்பிரவேசம் பற்றி ஜனார்த்தனன் கேட்கின்றார். பின்னர் நானும் நிற்க மாட்டேன் நீங்களும் நிற்காவிட்டால் யார் சுப்பர் மாட்கெட்டை பார்த்துக் கொள்வது என்று சொல்ல மீனாவும் ஜீவாவும் கோபத்தில் பார்க்கின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement