ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று தான் மாரி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம் வாங்க.
மாரியின் அம்மா தெய்வானையை தாரா அசிங்கப்படுத்துகிறாள்.பிறகு தெய்வானை ஸ்ரீஜாவுக்கும் மாரிக்கும் தனித்தனியாக தீபாவளி சீர் செய்ய அதை பார்த்த ஹாசினி இருவரையும் வைத்து மாரி கையால் சூர்யாவுக்கும் சூர்யா கையால் மாரிக்கும் மோதிரம் மாற்ற சொல்கிறாள். இதை பார்த்த தாரா, ஜாஸ்மின் கடுப்பாகின்றனர்.
ஹாசினி செயலால் தெய்வானை சந்தோஷமாக வெளியே வர அப்போது பார்வதி சுஜாதா வருகின்றனர். ஹாசினி நடந்த விஷயத்தை சொல்ல பார்வதியும் சுஜாதாவும் சந்தோஷப்படுகின்றனர்.மறுபக்கம் தாராவும் ஜாஸ்மினும் அப்செட்டாக இருக்கின்றனர். நாம் எது செய்தாலும் மாரிக்கு சாதகமாக முடிகிறது என்று கடுப்பாகின்றனர்.
இந்த நேரத்தில் ஹாசினி ஸ்வீட் கொண்டு வந்து இருவரையும் கிண்டல் செய்ய மேலும் கடுப்பான ஜாஸ்மின் அவள் வைத்திருந்த மாரியின் கம்மலை எடுத்து உடைக்க போக மாரி தடுக்கிறாள்.இப்படியான நிலையில் அடுத்ததாக என்ன நடக்கவுள்ளது என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!