ஷு தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் மாரி. எனவே இன்றைய எப்பிஷோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம்.
மாரிக்காக சூர்யா பொய் பேசியதுக்காக தேவி அம்மாவிடம் மன்னிப்பு கேட்க தேவி அம்மா படத்திலிருந்து பூ கீழே விழ அதை எடுத்து பார்த்து சூர்யா சந்தோஷப்படுகிறான்.மறு பக்கம் ஜாஸ்மின் அப்செட் இருக்க ஸ்ரீஜா வந்து சூர்யா மாமா மனசுல இடம் பிடிக்க நான் ஒரு ஐடியா சொல்றேன் என்று சொல்லி ஜிமிக்கி விஷயத்தை சொல்கிறாள்.
மேலும் நீ சூர்யா மாமா ரூமில் இருந்து மாரியின் ஜிமிக்கி எடுத்து உன்னுடைய ஜிமிக்கி என்று சொன்னால் கண்டிப்பாக சூர்யா மாமா உன் மீது பாசமாய் இருப்பார் என்று சொல்கிறாள். அடுத்து இருவரும் திட்டமிட்டு ஸ்ரீஜா மாரியிடம் பேச்சு கொடுக்க ஜாஸ்மின் உள்ளே சென்று மாரியின் ஜிமிக்கி எடுத்து வைத்துக் கொள்கிறாள்.
அப்போது சூர்யா வர சூர்யாவிடம் இது தன்னுடைய ஜிமிக்கி என்று சொல்லி தான் சமயபுரம் வரும்போது தொலைத்துவிட்ட விஷயத்தையும் சொல்ல உடனே சூர்யா தன்னிடம் உள்ள ஜிமிக்கி எடுத்துக்காட்ட ஓ இதுதான் என் ஜிமிக்கி பாத்தீங்களா கடவுள் அப்பவே நம்மளை ஒன்று சேர்த்துட்டாரு என்று சொல்லி அந்த ஜிமிக்கி வாங்க சூர்யா பீலாக ஜிமிக்கி கொடுத்து அப்சட்டாக உட்காருகின்றான்.
அடுத்து வெளியே வரும் ஜாஸ்மின் கையில் இருக்கும் ஜிமிக்கி பார்த்து மாரி இது என்னுடைய ஜிமிக்கி என்று சொல்ல நடந்த அனைத்து விஷயத்தையும் ஜாஸ்மின் சொல்கிறாள். பாத்தியா இனிமே நான் தான் ஜெயிக்கப் போறேன் சூர்யா என் மேல தான் அன்பா இருப்பாரு உன்னை இந்த வீட்டை விட்டு அனுப்புவேன் என்று சொல்கிறாள்.
உடனே மாரி உண்மை என்னைக்குமே ஜெயிக்கும் நீ மாமா கிட்ட பொய் சொல்லி இருக்க என்று சொல்லி உள்ளே செல்ல சூர்யாவை பார்த்து பீல் செய்கிறாள். இப்படியான நிலையில் மறுநாள் காலை ஜோசியர் வர தாரா ஜாஸ்மினுக்கும் சூர்யாவிற்கும் நிச்சயதார்த்த நாள் குறிப்பதாக சொல்கிறாள்.அடுத்து நடக்கப் போவது என்ன? நிச்சயத்தை மாரி எப்படி தடுத்து நிறுத்த போகிறாள்? என்பது வரும் எப்பிஷோட்களில் தான் தெரியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!