• Sep 20 2024

எட்டு வருடங்களுக்குப் பிறகு ஜோடி சேரும் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா- வெளியாகிய இறைவன் படத்தின் போஸ்டர்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் இறுதியாக அகிலன் என்னும் திரைப்படம் வெளியாகியது இருப்பினும் இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து என்றென்றும் புன்னகை படத்தின் இயக்குநர் அகமது இயக்கத்தில் இறைவன் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்து வருகின்றார். இந்நிலையில் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கு பிறகு ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் இறைவன் படத்தில் கூட்டணி அமைப்பதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த சூழலில் இன்று மாலை படம் குறித்து முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்தது. அதன்படி ரிலீஸ் தேதியுடன் இறைவன் படத்தின் போஸ்டர் வெளியாகி உள்ளது. அதாவது நான்கு மொழிகளில் இறைவன் படம் வெளியாகிறது.


மேலும் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி இறைவன் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அந்த போஸ்டரில் நயன்தாரா மற்றும் ஜெயம் ரவி நடுவில் ரத்தக் கரையுடன் ஒரு கத்தி இருக்கிறது. அந்த வகையில் இந்த படமும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு வரச் செய்யும் அளவிற்கு திரில்லர் படமாக எடுக்கப்பட்டிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement