• Sep 20 2024

முதன்முறையாக மூன்று கதாநாயகிகளுடன் ஜோடி சேரும் ஜெயம் ரவி- அதுவும் யாருடைய இயக்கத்தில் நடிக்கிறார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஜெயம் ரவி. இவர் இறுதியாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து இதுவரை அவரது கேரியரில் இல்லாத வகையில் பிரம்மாண்டமான படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயம் ரவியின் 32வது படமாக உருவாகும் இதுகுறித்து ஏற்கனவே செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில், தற்போது படக்குழு தரப்பில் இருந்து டைட்டில் அறிவிப்புடன் அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜெயம் ரவியின் 32வது படத்துக்கு 'ஜீனி' (Genie) என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.


 வேல்ஸ் பிலிம்ஸின் 25வது படமான ஜெனி, பான் இந்தியா மொழிகளில் உருவாகவுள்ளது. முக்கியமாக இந்தப் படத்துக்கு இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு ஜெயம் ரவி - ஏஆர் ரஹ்மான் காம்போ மீண்டும் இணைகிறது.


அதேபோல், இப்படத்தில் மலையாளத்தில் இருந்து கல்யாணி பிரியதர்ஷன், தெலுங்கில் இருந்து கிருத்தி ஷெட்டி, பாலிவுட்டில் இருந்து கபி வாமிகா மூவரும் ஜெயம் ரவி ஜோடியாக நடிக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் ஜெனி திரைப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. ஏஆர் ரஹ்மான் இசை, 3 நாயகிகள், 100 கோடி பட்ஜெட், பான் இந்தியா படம் என இப்போதே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது 'ஜீனி.


' இந்தப் படத்தை மிஷ்கினின் அசிஸ்டெண்ட் அர்ஜுனன் இயக்குகிறார். ஜீனி தான் இவரது முதல் படம் ஆகும். இந்நிலையில் ஜீனி படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில் ஜெயம் ரவி, கல்யாணி பிரியதர்ஷன், கிருத்தி ஷெட்டி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். இதனையடுத்து ஜெயம் ரவி என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement