• Sep 20 2024

20 வருட சீக்கிரெட்டை போட்டுடைத்த ஜெயம் ரவி.. பிறந்தநாள் அதுவுமாக சிறப்பான சம்பவம் பண்ணியிருக்காரே..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவர் தமிழ்த் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான படம் 'ஜெயம்'. முதல் படத்திலேயே பல ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டமையினால் அப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. 


இப்படத்தைத் தொடர்ந்தும் அடுத்தடுத்து அண்ணனின் இயக்கத்திலேயே நடித்து வந்தார் ஜெயம் ரவி. அந்தவகையில் அண்ணன், தம்பி இருவரினதும் கூட்டணியில் வெளியான 'எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், தில்லாலங்கடி, தனி ஒருவன்' ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி சாதனை படைத்தன.


இந்நிலையில் ஜெயம் ரவி இன்றைய தினம் தனது 42-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு ரசிகர்கள் மட்டுமன்றி திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இப்பிறந்ததினத்திலேயே திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையும் சேர்த்து கொண்டாடி வருகிறார் நம்ம ஜெயம் ரவி. இதற்காக இவர் பிரமாண்ட விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார். அந்த விழாவில் ஜெயம் ரவியின் ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.


அதுமட்டுமல்லாது அவரது மனைவி ஆர்த்தி, மகன்கள் மற்றும் குடும்பத்தினரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். சென்னையில் நடைபெற்ற இந்த விழாவின்போது நடிகர் ஜெயம் ரவி ஆதரவற்ற குழந்தைகளுடன் கேக் வெட்டி தனது பிறந்தநாளை மிகவும் சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தார்.


இந்த நிகழ்வில் அவர் பேசுகையில், சினிமாவில் தான் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு தனது அண்ணன் மோகன் ராஜா தான் காரணம் என மிகவும் உருக்கமாக கூறினார்.  மேலும் "வெற்றி கொடுத்தாலும் நல்ல படங்களை மட்டும் பண்ண வேண்டும், அதற்காக காத்திருக்க வேண்டும் என என்னுடைய அப்பா அடிக்கடி சொல்வார்.


அதனால் தான் நான் இந்த 20 ஆண்டுகளில் 25 படங்கள் மட்டுமே பண்ணியுள்ளேன். இதனால் எனக்கு தோல்வி படங்களும் குறைவு" என ஜெயம் ரவி தனது வெற்றியின் ரகசியத்தையும் அந்நிகழ்வில் ஓபனாக கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement