• Sep 20 2024

வெளியானது ஜெயம் ரவியின் 30-ஆவது படத்தின் டைட்டில்... பேரைக் கேட்டாலே பாசம் பொங்குதே..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

எ.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி தனது 30-ஆவது படத்தில் நடித்து வருகின்றார். பேஷன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.மேலும் இவர்களுடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரனும் இப்படத்தில் நடிக்கிறார். 


அத்தோடு இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். இந்நிலையில் விநாயக சதுர்த்தி தினமான இன்று இப்படத்தின் உடைய பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்..


அந்தவகையில் ஜெயம் ரவியின் 30-ஆவது படத்திற்கு 'பிரதர்' என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பெயரை வைத்து பார்க்கும் போது படத்தினுடைய கதை அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டமைந்துள்ளது என்பது தெளிவாகின்றது.

Advertisement

Advertisement