பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஜெயம்ரவி நடிப்பில் 'அகிலன்'திரைப்படம் வெளியாகி இருக்கின்றது. இப்படத்தினை இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் என்பவர் இயக்கியுள்ளார்.
இதில் ஜெயம் ரவியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் உட்படப் பலர் நடிக்கின்றனர். பெருங்கடலில் நடக்கும் அரசுக்கு எதிரான தவறான விஷயங்களை பற்றி கூறும் கதைக்களத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள இப்படமானது மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான இப்படம் ஆனது எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. தமிழகத்திலேயே சற்று பின்தங்கி இருக்கும் இப்படத்தின் வசூல் கேரளாவில் படுமோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
அந்தவகையில் இதுவரை கேரளாவில் ரூ.16 லட்சம் மட்டுமே அகிலன் திரைப்படம் வசூல் செய்துள்ளதாம். இதன்முலம் கேரளாவில் அகிலன் திரைப்படம் டிசாஸ்டர் ஆகியுள்ளது என தகவல் வெளியாகி இருக்கின்றது.
Listen News!