நடிகர் ஜெயம் ரவி தனது அகிலன் மற்றும் பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இதில், அகிலன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி சென்ற நிலையில், இப்போது புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெள்ளியாகியுள்ளது.
தற்போது, இப்படம் மார்ச் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளனர். ரிலீஸ் தேதியுடன் மிரட்டல் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இப்படத்தின் ட்ரைலரும் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கிய இந்தப் படத்தில் ஜெயம் ரவி, இந்தியக் கடற்கரைக் கடத்தல் காராக நடித்துள்ளார்.
நடிகை ப்ரியா பவானி சங்கர் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில், ஹரிஷ் உத்தமன் மற்றும் தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர்.
இதற்கிடையில், ஜெயம் ரவி நடித்துள்ள பிரம்மாண்ட படமான பொன்னியின் செல்வன் 2 பாகம் இவருக்கு மிக்பெரிய படமாகும். இது போக, இயக்குநர் அகமதுவுடன் தனது ‘இறைவன்’ படத்தின் படப்பிடிப்பையும் முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Listen News!