தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவருக்கு கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் ஆனது. இவர் ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஆரவ் மற்றும் அயான் என இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளன.
ஜெயம் ரவியின் மூத்த மகனான ஆரவ், சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் அவருக்கு மகனாக நடித்திருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு விருதுகளும் கிடைத்தன.
விரைவில் நடிகர் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தியும் சினிமாவில் நடிக்க வரப்போகிறாரோ என்கிற கேள்வி ரசிகர்கள் மனதில் எழத்தொடங்கி உள்ளது. இதற்கு காரணம் ஆர்த்தி ரவி சமீபகாலமாக நடத்தி வரும் போட்டோஷூட் தான்.
சினிமா நடிகைகை மிஞ்சும் வகையில் ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஏன் சினிமாவில் ஹீரோயினாக நடிக்கக் கூடாது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது summer காலத்தில் செம ஜாலியாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். இந்தப் போட்டோ ரசிகர்களைக் கவர்ந்து வருவதையும் காணலாம்.
Listen News!