கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து வைத்திருக்கும் நடிகை தான் த்ரிஷா. இவர் தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தில் நடித்துவருகிறார். விஜய்யும், த்ரிஷாவும் கடைசியாக குருவி படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர்.
இது தவிர இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்திலும் குந்தவை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் த்ரிஷாவுக்கு கார்த்தியும், ஜெயம் ரவியும் க்ளாஸ் எடுத்த சம்பவம் தெரியவந்திருக்கிறது.
அதாவது த்ரிஷாவுக்கு தமிழ் ஓரளவுதான் தெரியும். ஆனால், பொன்னியின் செல்வன் சங்க காலத்தில் நடந்த கதை. எனவே செந்தமிழை பேச வேண்டும். படத்தில் அவருக்கு கிருத்திகா நெல்சன் என்பவர் டப்பிங் கொடுத்திருந்தாலும் ஷூட்டிங் ஸ்பாட்டில் கார்த்தி, ஜெயம் ரவியிடம் தமிழில் பேசுவாராம் த்ரிஷா. அப்போது அவர் குந்தவை என்பதைக்கூட குந்த்வை என்றே சொல்வாராம்.
அதேபோல், அவர்களிடம் செந்தமிழ் என்பதற்கு பதிலாக செண்ட் தமிழ் என்றாராம். இதை ரொம்பநாளாகவே அப்படியே சொல்லிக்கொண்டிருக்க ஒரு நாள் த்ரிஷாவை அமரவைத்து செந்தமிழ் சொல்லு என்றனராம் இருவரும்., அவரும் மீண்டும் செண்ட் தமிழ் என்றே கூறினாராம். அதன் பிறகு அது செண்ட் தமிழ் இல்லை செந்தமிழ் என தொடர்ந்து க்ளாஸ் எடுத்துக்கொண்டே இருந்தனராம் ரவியும், கார்த்தியும்.
அதன் பிறகே அவர் செண்ட் தமிழ் என்பதை செந்தமிழ் என சொல்ல கற்றுக்கொண்டாராம். இதனை ஜெயம் ரவி ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் நல்ல வேளை தமிழை கொலை செய்ய பார்த்த த்ரிஷாவை இருவரும் திருத்தியிருக்கிறார்கள் என ரசிகர்கள் கூறிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!