அந்தவகையில் இன்றைய எபிசோட்டில் ஜீவா தண்ணீர்ப் பாத்திரத்தை தூக்கி வந்து அடுப்பில் வைக்கின்றார். அதற்கு மீனா "எல்லாருக்கும் சுடுதண்ணி வைக்கணும் ஜீவா" எனக் கூறுகின்றார். அதற்கு ஜீவா சுடுதண்ணி தானே நான் வைக்கிறேன்" எனக் கூறுகின்றார். மேலும் இதில் கஷ்டம் எதுவும் இல்லை நானே பார்த்துக்கிறேன் என்று கூறி மீனாவை எதுவுமே செய்ய விடாமல் தானே சுடுதண்ணீர் வைக்கின்றார்.
மேலும் இந்த வீட்டில் எல்லா வேலையும் நீ தான் எனக் கூறி மீனாவிற்காக பரிதாபப்படுகின்றார் ஜீவா. அதற்கு மீனா எல்லாரும் குழந்தை பெற்றதும் எல்லாம் சரியாகிடும் என ஆறுதல் கூறுகின்றார். அதன் பின்னர் மீனா மேல் அக்கறைப்பட்டு ஒரு சில கேள்விகளை கேட்டு விட்டு மீனாவை சீக்கிரம் போய் தூங்கும் படி கூறுகின்றார் ஜீவா.
அதற்கு மீனா "ஜீவாவா இது என் மேல் இவ்வளவு அக்கறை காட்டுகின்றான்" என நினைத்துப் பூரிப்படைகின்றார்.
அதன் பின்னர் கதிரும் முல்லையும் வெளியில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றனர். மேலும் கடைக்கு ஒருவர் குழந்தையுடன் வந்ததாகவும் தனக்கு வயிற்றில் இருக்கிற நம்ம பாப்பா ஞாபகம் வந்ததாகவும் குமரன் கூறுகின்றார். அதற்கு முல்லையும் நம்ம குழந்தையை நல்ல படியாக வளர்க்கணும் எனக் கூறி சந்தோசப்படுகின்றார். பின்னர் மீனா வந்து முல்லையை அழைத்து சென்று தூங்க வைக்கின்றார்.
பின்னர் மீனா ஐஸ்வர்யாவை தேடுகின்றார். ஐஸ்வர்யா தனது கணவருடன் வெளியில் இருந்து பேசிக் கொண்டிருக்கின்றார். ஐஸ்வர்யாவையும் போய்த் தூங்குமாறு கூறுகின்றார். அதற்கு ஐஸ்வர்யாவின் கணவர் "ஏன் அண்ணி எல்லா ஜோடிகளையும் பிரிக்கிறீங்க" என கிண்டலாக கேட்கின்றார்.
அடுத்தநாள் காலையில் பழக்கடைக்காரன் வந்து நிற்கின்றார். மீனாவிடம் பழம் வேணுமா எனக் கேட்கின்றார். மீனா எல்லாமே இருக்கு எனக் கூறு விட்டுப் போகின்றார். பின்னர் மூர்த்தி, தனம், முல்லை அனைவரும் பேசிக் கொண்டு இருக்கின்றார்கள். அதில் தங்கம் நாளுக்கு நாள் விலை ஏறுவதாக கூறிக் கதைக்கின்றனர்.
அந்த இடத்திற்கு வந்த ஐஸ்வர்யாவின் கணவர் பழக்கடைக்காரர் இன்னும் போகாமல் வீட்டிற்கு முன்னால் இருப்பதைக் கூறுகின்றார். எதுவும் பிளான் ஓட திருடுவதற்கு வந்திருப்பானோ தெரியல எனவும் கூறுகின்றார். பின்னர் எல்லாரும் சேர்ந்து அந்தப் பழக்கடை காரனைப் பார்க்க செல்கின்றனர்.
மீனா அவரைப் பார்த்து "நான் தான் அப்பவே உன்னை போக சொல்லிட்டனே ஏங்க திரும்பவும் நிக்கிறீங்க எனக் கேட்கின்றார். அதற்கு பாலைக்கடைக்காரன் வீட்டில நிறைய பொண்ணுங்க கர்ப்பமாக இருப்பதாக சொன்னாங்க, அதனால தான் இங்கயே கடையைப் போட்டிட்டேன் " என்கின்றார். அதற்கு தனம் ஷாக்காக மூர்த்தி சிரிக்கின்றார்.
அதன் பின்னர் மீண்டும் அவர்கள் வீட்டிற்குள் சென்று ஒன்றாக அமர்ந்திருந்து பேசுகின்றனர். அப்போது மீனா "குன்னக்குடியிலேயே இப்போ நம்ம வீடு தான் ஹாப்பி ஆக இருக்கு போல" எனக் கூறுகின்றார். அதற்கு மூர்த்தி, மற்றும் ஜீவா சிரிக்கின்றனர்.
மேலும் "போறவாறவங்க எல்லாரும் நம்ம குடும்பத்தைப் பற்றிப் பேசுறது எனக்கு ஒரு மாதிரியாக இருக்கு" என தனம் கூறுகின்றார். இவ்வாறு எல்லாரும் பேசிக் கொண்டிருக்கையில் மீனா எல்லாருக்கும் ஜூஸ் கொண்டு வந்து கொடுக்கின்றார்.
அங்கு வந்த தாயிடம் "இங்க சமையல் எல்லாமே மீனா தான்" என தனம் கூறுகின்றார். அதுமட்டுமல்லாது "இப்போ இவ தான் எல்லா வேலையும் செய்திட்டு இருக்கா" எனவும் மீனா பற்றித் தனம் தனது தாயிடம் கூறுகின்றார்.
இவ்வாறாக இன்றைய எபிசோட் இத்துடன் நிறைவடைகின்றது.
Listen News!