• Sep 20 2024

அண்ணன் கூடயே இருந்திருக்கலாம் என முடிவெடுத்த ஜீவா- கதிரைப் பகடைக்காயைப் பயன்படுத்தும் ஐஸ்வர்யா- மீனா கொடுத்த அட்வைஸ்ட்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

அதாவது முல்லை ஐஸ்வர்யாவைத் திட்டி விட்டு சென்றதும் கண்ணன் ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார். தொடர்ந்து ஜீவா வீட்டில் ஒரு காணி விற்பதைப் பற்றி ஜீவாவிடம் ஆலோசனை கேட்கின்றார் அவரது மாமா. ஜீவா அதற்கு ஆலோசனை சொல்லியும் அது சரி வராது போல ஜனார்த்தனன் சொல்ல ஜீவா அதிர்ச்சியாகின்றார்


பின்னர் மீனா ஐஸ்வர்யாவைப் பார்க்க கண்ணன் வீட்டுக்குச் செல்கின்றார். அங்கு கண்ணன் வீடு பெருக்கிக் கொண்டிருக்கின்றார். அதனைப் பார்த்து ஷாக்கான மீனா கண்ணனை நக்கலடிக்கின்றார். தொடர்ந்து கண்ணன் டீ வைக்க போக மீனா போய் பேசுகின்றார். அப்போது வீட்டை விட்டு ஏன் வந்தோம் என்று தோணுதா என்று கேட்ட போது ஆமாம் அண்ணி என்று சொல்கிறார்.

அப்போ அண்ணன் வீட்டுக்கு போக வேண்டியது தானே என்று சொன்ன போது  கண்ணன் இனிமேல் போற ஐடியா இல்லை. போனால் அண்ணன் அடிக்கும் என்று சொல்கின்றார். பின்னர் இரவு ஆனதும் மீனாவிடம் சென்று இங்க  சும்மா இருக்கிறமாதிரி இருக்கு ஏதோ பிடிச்சு வைச்ச பொம்மை மாதிரி இருப்பது போல் தோணுகிறது நானும் ஏதாச்சும் பண்ணனும்ல. எங்க கடையில எல்லா வேலையையும் நான் தான் பார்த்திட்டு இருந்தேன். ஆனால் இங்க சும்மா இருக்கிற மாதிரியே இருக்கு என்று சொல்கின்றார்.


அதே போல ஐஸ்வர்யா வீடியோ எடுக்கிறதுக்கான ஸ்ரான்ட் வாங்கணும் என்று சொல்ல கண்ணன் காசு இல்லை. இப்போதைக்கு எதுவும் வாங்க வேணாம் என்று சொல்ல ஐஸ்வர்யா அப்போ பணத்தை உங்க அண்ணன் கிட்ட கேளு என்று சொன்ன போது கண்ணன் முடியாது என்று சொல்ல அப்போ கதிர் அண்ணன் கிட்டை கேளு அவர் தான் நமக்கு சர்ப்போட் பண்ணுராரே என்று சொல்ல கண்ணன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement