விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தற்பொழுது எல்லோரும் புது வீட்டுக்கு வந்த சந்தோசத்தில் இருக்கின்றனர். இப்படியான நிலையில் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் ஐஸ்வர்யா கான்சர் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறவங்க எவ்வளவு கஸ்டப்படுறாங்க தெரியுமா? அப்பிடியொரு நோயால் பாதிக்கப்பட்டவங்க நம்ம வீட்டிலையும் இருக்கிறாங்க என்று சொல்லி வீடியோ போடுகின்றார்.
இதனால் பதறிப்போன எல்லோரும் யாருக்கு கான்சர் வருத்தம் என்று கேட்க முல்லை, தனம், மீனா எல்லோருமே சொல்ல மறுத்து விட்டனர்.இருந்தும் ஐஸவர்யா தனத்திற்கு தான் கான்சர் நோய் என்று சொல்லி விட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் உள்ளது.
இந்த நிலையில் மூர்த்திக்கு தனத்திற்கு தான் கான்சர் என்ற விஷயம் தெரிய வந்த சீனை ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல போல அமைத்துள்ளதோடு இதில் முல்லை குழந்தையாக மின்விசிறியை பெட்டுக்குள் வைத்திருக்கின்றார். அதே போல ஜீவாவாக புதிதாக ஒருவர் மீனா பக்கத்தில் நிற்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!