விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. இந்த சீரியலில் ஜீவா மற்றும் காவியா காதலித்த விடயம் எல்லோருக்கும் தெரிந்து விட்டது. இதனால் ப்ரியா ஜீவாவை விட்டுப் பிரிந்து தன்னுடைய வீட்டில் இருக்கின்றார்.
அதே போல பார்த்திபனும் காவியாவும் மற்றவர்கள் முன்னாடி சந்தோஷமாக இருப்பது போல காட்டிக் கொள்கின்றனரே தவிர இருவரும் பிரிந்து தான் வாழ்கின்றனர். இப்படியான நிலையில் ஓர் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
மழைக்குள் நனைந்த படி ஜீவா நிற்க...ப்ரியா வந்து பேசுகின்றார்.நீங்கள் இப்படி பண்றுதலால வீட்டில் இருக்கிறவங்க வேணும் என்றால் இரக்கப்படலாம்.எனக்கு உங்க மேல துளி கூட இரக்கம் வராது என கோவமாக பேசுகின்றார்.
இந்த நேரம் காவியா வந்து பேசுகின்றார்.இதனால் கோவமாக ஜீவா இது புருஷன் பொண்டாட்டிக்கிடையில் நடக்கிற பிரச்சனை .இதை நாங்களே கதைச்சு பேசிப்போம்.இனிமே எங்களுக்குள் நடுவுல வராதே எனக் சொல்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.
Listen News!