விஜய் டிவியில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.இதில் தற்போது அண்ணன தம்பிகள் என அனைவரும் ஒவ்வொரு காரணத்திற்காக பிரிந்து வாழுகின்றனர்.
இதில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என எதிர்பார்பில் காத்திருக்கும் ரசிகர்களுக்கு தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதாவது மீனாவின் தங்கையின் கணவர் மீனா வீட்டிற்கு வந்து கலுடன் கொஞ்சி விளையாடுகின்றார்.இதன் பிறகு கயலை எந்த ஸ்கூலில் சேர்க்க போறீங்க என கேட்கின்றார்.அதற்கு மீனாவின் தந்தை திருச்சியில் நல்ல ஸ்கூல் இருக்கு அங்கே தான் சேர்க்கப்போறேன் எனக் கூறுகின்றார்.
இதனால் கோவமடைந்த மீனா..என்ன இவ தினமும் திருச்சி போயிட்டு போயிட்டு வருவாளா..? என கத்துகின்றார்.இதற்கு மீனாவின் தந்தை உங்க இரண்டு பேரையும் திருச்சியிலே செட்டில் பண்ணினா சரியாப்போச்சு எனக் கூற ஜீவாவிற்கு கோவம் வந்து எழுந்து சென்றுவிடுகின்றார்.
இதன் பிறகு மீனா உடுப்பு மடித்து கொண்டு இருக்கும் போது மீனாவின் தாய் பதட்டத்துடன் ஓடி வந்து மாப்பிள்ளை அப்பா கிட்ட சண்டை போட்டுட்டு இருக்கிறார் என சொல்கின்றார்.உடனே மீனாவும் ஓடி வந்து பார்க்கின்றார்.
அந்த நேரம் பிஸ்னஷை என் கையில மொத்த குடுத்திட்டு பாருங்க மாப்பிள்ளை எண்டீங்க...ஆனால் என்னை எந்த முடிவும் எடுக்க விடலையே...இப்ப கயல் எங்க படிக்க வேண்டும் என பேசிட்டு இருக்கிறீயள்....அதை எல்லாம் நீங்க ஏன் முடிவு பண்ணுறீங்க..தயவு செய்து என் பொண்ணுக்கு ஆச்சும் என்னை அப்பாவா இருக்க விடுங்க என கோவமாக சொல்லிவிட்டு செல்கின்றார்.இத்துடன் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.
இதோ அந்த ப்ரமோ...
Listen News!