• Sep 20 2024

முல்லையில் வளைகாப்புக்கு வர மறுத்த ஜீவா- ஐஸ்வர்யாவின் நக்கலுக்கு கதிர் கொடுத்த பதிலடி- அதிர்ச்சியில் தனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அஅந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கதிரும் தனமும் முதலில் ஐஸ்வர்யா கண்ணன் வீட்டுக்குச் செல்கின்றனர். அப்போது கண்ணன் குளித்துக் கொண்டிருப்பதாக ஐஸ்வர்யா சொல்ல நீண்ட நேரம் காத்திருந்து பின்னர் கண்ணன் வந்ததும் முல்லைக்கு வளைகாப்பு வைத்திருக்கும் விஷயத்தை தனம் சொல்கின்றார். அத்தோடு கட்டாயம் வரும்படியும் கூறுகின்றார்.


இதனால் இருவரும் வருவோம் ஆனால் அண்ணன் ஏதும் சொல்லாது தானே என கண்ணன் கேட்கின்றார். இதனால் கதிர் அண்ணன் ஏதும் சொல்லாது நீங்க வரலாம் என்று கூறி விட்டு அங்கிருந்து கிளம்புகின்றனர். பின்னர் இருவரும் மீனா வீட்டுக்குச் சென்று வளைகாப்புக்கு அழைக்கின்றனர். கதிர் நால்வருக்கும் ஒரே மாதிரி எடுத்த சேட்டை கொடுத்து விட்டு ஜீவா வந்ததும் வளைகாப்பு விஷயத்தை கூறும்படி சொல்லிவிட்டு கிளம்புகின்றனர்.


தொடர்ந்து ஜீவா நிற்கும் கடைக்குச் சென்று கதிர் ஜீவாவிடம் பேசுகின்றார். ஆனால் ஜீவா தான் வளைகாப்புக்கு வரமாட்டேன் என்று கூறுகின்றார்.கதிர் எவ்வளவோ கெஞ்சிப் பார்த்தும் ஜீவா நான் வந்தால் இனிமேல் நல்லா இருக்காது எனக் கூறுகின்றார். தொடர்ந்து வீட்டுக்கு வந்த கதிர் ஜீவா வளைகாப்புக்கு வரமாட்டேன் என்று சொன்ன விஷயத்தை சொல்ல தனம் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement