• Sep 20 2024

ஜனனிக்கு எதிராக ஜீவானந்தம் தீட்டிய புதுத் திட்டம்... கோபத்தின் உச்சத்தில் ஜான்சிராணி... உண்மையைக் கண்டுபிடித்த கதிர்... அதிரடித் திருப்பதுடன் 'எதிர்நீச்சல்'..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பை அடிக்கடி தூண்டிய வண்ணம் இருக்கின்றன.


இந்நிலையில் தற்போது இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜீவானந்தம் "அந்த ஜனனி படிச்சவ எல்லோ அதுதான் ஸ்மார்ட் ஆக கேம் ஆடுறா, உடனே டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணுங்க அந்த பட்டம்மாளுடைய தம் ஆபரேஷனனை உடனே எடுத்தாகணும்" என்கிறார்.


மறுபுறம் ஜான்சிராணி கோபத்தில் உட்கார்ந்து இருக்கின்றார். அங்கு வந்த குணசேகரன் "என்னம்மா என்ன பிரச்சினை" எனக் கேட்கின்றார். அதற்கு ஜான்சிராணி "இந்தக் கல்யாணத்தில் உன் தங்கச்சிக்கு இஷ்டம் இருக்கா? இல்லையா? என்று கேட்டு சொல்லு" என்கிறார்.


பின்னர் கதிர் "இவளுகள் எல்லாம் சேர்ந்து எதோ பிளான் பண்ணுறாளுகள்" என உண்மையை கூறுகின்றார். அதற்கு நந்தினி, ஜனனி திருதிருவென முழிக்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. ஜீவானந்தம் நல்லவரா..? கெட்டவரா..? என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம். 

Advertisement

Advertisement