சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியலாக 'எதிர்நீச்சல்' மாறியுள்ளது. இதில் அடிக்கடி அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் பட்டமாளின் 40% ஷேர் தற்போது ஜீவானந்தம் பேருக்கு மாறியுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது.
இந்த நிலையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது ஜனனியுடன் சேர்ந்து குணசேகரன் மறு்றும் தம்பிமார் அனைவரும் ஜீவானந்தத்தைப் பார்க்கப் போகின்றனர். அப்போது ஜனனி எந்தத் தைரியத்தில் அப்பத்தாவின் கைரேகையை எடுத்தீங்க என்று கேட்க குணசேகரன் நீ தான் ஜனனியாம்மா என்று கேட்கின்றார்.
பின்னர் குணசேகரன் தம்பியாட்களுக்கும் ஜுவானந்தத்திற்கும் இடையில் சண்டை முற்றிக் கொண்டே போகின்றது. இதனால் கடுப்பான ஜீவானந்தம் துப்பாக்கியை எடுத்து குணசேகரன் உனக்கு இன்னும் 10 நிமிஷம் தான் டைம் இருக்கு அதுக்குள்ள நீ..... என்று சொல்லும் போது குணசேகரன் மற்றும் ஜனனி அதிர்ச்சியடைந்து நிற்கின்றனரர். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகின்றது.
Listen News!