சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் சீரியல்களில் அதிகம் மக்கள் விரும்பிப் பார்க்கும் சீரியல் 'எதிர்நீச்சல்'. இந்த சீரியலானது ஏனைய சீரியல்களை விடவும் ஏராளமான ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
அதில் ஜீவானந்தம் பட்டம்மாள் அம்மா வீட்டுப் பேர்த்தி என்று சொல்லி அடிக்கடி ஒரு பொண்ணு கால் பண்ணுமே அது யார்" எனக் கேட்கிறார். அதற்கு "ஜனனி" என சொல்லிப் பதிலளிக்கின்றனர். இதை வைத்துப் பார்க்கும் பொது ஜீவானந்தம் புதுத் திட்டம் தீட்டுவது தெரிகிறது.
மறுபுறம் கரிகாலன் "மாமியார் வீட்டு விருந்தென்று வெறு வயிற்றுடன் வந்தேன்" எனக் கூறி குணசேகரனிடம் புலம்புகின்றார். அதற்கு நந்தினி "எல்லாப் பொம்பிளைகளையும் அழ விட்டிற்று உனக்கு விருந்தா கேட்குது விருந்து" எனத் தனக்குத்தானே எண்ணுகின்றார்.
அங்கு வந்த சக்தியையும், ஜனனியையும் பார்த்த குணசேகரன் "வந்திட்டாங்கப்பா ராஜாவும் ராணியும், பேசாமல் நாங்க நாலு பேரும் வீட்டைக் காலி பண்ணிப் போய்டலாம்பா" எனக் குத்தலாகப் பேசுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!