நடிகர் சூர்யா தயாரித்து நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படத்திற்காக நடிகர் சூர்யா இன்று டெல்லியில் நடைபெற்று வரும், முதல் முறையாக தேசிய விருதை பெற்றுள்ளார். மேலும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது சூர்யா ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா தயாரித்து நடித்திருந்த திரைப்படம், 'சூரரைப் போற்று'.மேலும் இந்த படம் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகி, அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அத்தோடு பொதுவாகவே சாதித்த மனிதர்கள் வாழ்க்கையை தழுவி எடுக்கப்படும் படங்களுக்கு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பது போல் இந்த படத்திற்கும் அதேயளவிற்கான விமர்சனங்கள் எழுந்தது.
அத்தோடு தனக்கு வந்த நிலை யாருக்கும் வர கூடாதென்றும், சாமானிய மக்களுக்கும் விமான பயணம் சத்தியமாக வேண்டுமென நினைத்து, விமான சேவையை துவங்கிய ஏர் டெக்கான் நிறுவனர், ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்த படம் எடுத்து திரையிடப்பட்டது.
ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி வாகை சூடிய இந்த படத்தில், சூர்யாவின் நடிப்பை பார்த்து, சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்கள் பலரும், கண்டிப்பாக சூர்யாவுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கிடைக்கும் என கூறிய நிலையில், அவர்கள் நினைத்தது போலவே 'சூரரைப் போற்று' திரைப்படம் மொத்தம் 5 தேசிய விருதுகளை வென்று குவித்தது.
68-வது தேசிய விருது விழாவில், சிறந்த படம், சிறந்த நடிகையாக அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகராக சூர்யா, சிறந்த பின்னணி இசைக்காக ஜிவி பிரகாஷ், சிறந்த திரைக்கதைக்காக இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இவ்வாறுஇருக்கையில் இன்று மாலை குடியரசு தலைவர் திரெளபதி முர்மு கையால் சூர்யா தேசிய விருதை பெற்றுள்ளார். இதனை ஜோதிகா கீழே அமர்ந்து போனில் போட்டோ எடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
அதே போல சிறந்த தயாரிப்பு நிறுவனத்திகான விருது 2டி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது, அதை ஜோதிகா மேடையில் பெற்றுக்கொண்டார். மேலும் அதை சூர்யா கீழே இருந்து போனில் புகைப்படம் எடுத்து இருக்கிறார்.
Finally 🤩😭 @Suriya_offl Congrats Thalaivaa !!!! #NationalAwards #SooraraiPottru pic.twitter.com/7OSW9CwDLD
Listen News!