• Sep 21 2024

கண்ணனை கண்ட பாட்டுக்குத் திட்டிய முல்லை- ஆபிஸர்ஷின் முடிவால் அதிர்ச்சியில் உறைந்த ஜீவா மற்றும் மூர்த்தி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஜீவாவுடன் பைக்கில் பேகும் மூர்த்தி கண்ணன் செய்ததை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே வர ஜீவா ஆறுதல்ப்படுத்துகின்றார். மேலும் எப்படியாவது கதிரை வெளியில் எடுத்திட வேண்டும் என்றும் சொல்லுவதோடு இருவரும் அப்படியே பாங்கிற்கு செல்கின்றனர். தொடர்ந்து முல்லை தான் கதிரைப் பார்த்தே ஆக வேணடும் என்று அடம் பிடிக்கின்றார்.


முல்லையை அவரது அம்மா மற்றும் அப்பா எல்லோரும் ஆறுதல்ப்படுத்தியும் அவர் கேட்பதாக இல்லை. இதனால் மீனாவும் முல்லையின் அப்பாவும் முல்லை கதிரைப் பார்க்க அழைத்துச் செல்கின்றனர். போலீஸ் ஸ்டேஷனில் கதிரைப் பார்த்த முல்லை அழ கதிர் முல்லையை சமாதானப்படுத்துகின்றார். கதிரிடம் பேசிவிட்டு வரும் போது கண்ணனைக் கண்ட முல்லை அவனைத் திட்டுகின்றார்.


உங்களுக்காக பாவம் பார்த்து வந்த அவரை இப்பிடி கொண்டு வந்து விட்டிட்டியே எனத் திட்டுகின்றார். இதனால் கண்ணன் கதிரிடம் மன்னிப்புக் கேட்கின்றார். தொடர்ந்து பாங்கிற்கு வந்த மூர்த்தியும் ஜீவாவும் தனத்தின் அண்ணனும் ஆபிஸர்ஷிடம் சமானாதம் பேசுகின்றனர். முதலில் மறுப்புத் தெரிவித்த அவர்கள் பின்னர் சமாதானம் ஆகி மூன்றே கால் லட்சம் பணம் கட்ட வேணும் என்று சொல்ல மூர்த்தியும் ஜீவாவும் அதிர்ச்சியடைகின்றனர். அத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement