குறிப்பாக 80 காலகட்டத்தில் இளைஞர்கள் பலரதும் மனதை கொள்ளைகொண்ட நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் பிரபலமான கதாநாயகியாகவும் விளங்கி இருக்கின்றார்.
அந்தவகையில் இவர் தமிழ் திரையுலகிற்கு 'மூன்று முடிச்சு' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். எனினும் இதற்கு முன்னர் வெளிவந்த பல தமிழ் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ், இந்தி திரையுலகில் மட்டும் 300 இற்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றி இருக்கிறார். அத்தோடு இவர் நடிப்பில் வெளிவந்த 'ஜானி, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, மூன்று முடிச்சு' ஆகிய படங்கள் இன்றும் பலருடைய விருப்பத்திற்குரிய படங்களாக இருக்கின்றன.
இவ்வாறு பலரதும் மனங்களை கொள்ளை கொண்ட இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு மரணமடைந்தார். பழம்பெரும் நடிகை ஸ்ரீதேவி இன்று நம்மிடையே இல்லாவிட்டாலும் ரசிகர்களின் இதயங்களில் இன்னும் உயிருடன் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்.
ஸ்ரீதேவி தன்னுடைய நடிப்பால் மட்டுமன்றி அழகாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்து இருக்கிறார். இன்றளவும் இவரது எந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் மக்கள் மனதில் பழைய நினைவுகள் ஏற்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீதேவியுடன் இணைந்து ஜோதிகா எடுத்துக் கொண்ட சிறுவயதுப் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதில் ஜோதிகா மட்டுமின்றி அவருடைய சகோதரிகளான நக்மா மற்றும் ரோஷினி ஆகியோரும் உள்ளனர்.
Listen News!