• Sep 20 2024

ஜோதிகா நடித்த சுமாரான படத்தின் 2ஆம் பாகம்.. இயக்குனருக்கு கொடுக்கப்பட்ட பெரிய அட்வான்ஸ்..!

Sivalingam / 5 months ago

Advertisement

Listen News!

ஜோதிகா மற்றும் சசிகுமார் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ’உடன்பிறப்பே’ என்ற படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க முடிவு செய்யப்பட்டு அந்த படத்தின் இயக்குனர் இரா சரவணனுக்கு ஒரு பெரிய தொகை அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான ’உடன்பிறப்பே’ என்ற படம் அண்ணன் - தங்கை பாசப்பிணைப்பு கொண்ட படமாக உருவானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டாலும் சுமாரான வெற்றியை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த படத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் இது ஜோதிகாவின் ஐம்பதாவது படம் என்பது மட்டுமே. இந்த நிலையில் ’உடன்பிறப்பே’ படத்தின் இரண்டாம் பாகம் குறித்து கடந்த சில வாரங்களாக ஆலோசனை செய்யப்பட்ட நிலையில் இரா சரவணன் கூறிய ஒன்லைன் கதை ஜோதிகாவுக்கு பிடித்து விட்டதால் உடனே அவருக்கு ஒரு மிகப்பெரிய அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. 



சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருப்பதாகவும் முதல் படத்தில் நடித்த சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி இரண்டாம் பாகத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

நெஞ்சை உருக்கும் சென்டிமென்ட் விஷயங்களுக்கு பஞ்சம் இல்லாமல் ’உடன்பிறப்பே 2’ உருவாகும் என்றும் முதல் பாகம் பி & சி சென்டர்களில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்ட நிலையில் இரண்டாம் பாகத்தை அனைத்து சென்டர்களிலும் வரவேற்பை பெரும் உருவாக்க இருப்பதாக  இயக்குனர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஜோதிகா தற்போது பாலிவுட்டில் பிஸியாக இருந்தாலும் ’உடன்பிறப்பே 2’ படத்தில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்பட்டது.

Advertisement

Advertisement