தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத நட்சத்திரத் தம்பதிகளாகத் திகழ்ந்து வருபவர்கள் சூர்யா-ஜோதிகா தம்பதியினர். அந்தவகையில் இவர்கள் இருவரும் இணைந்து 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு குழந்தைகள், குடும்பம் என செட்டில் ஆகி விட்டாலும் இவர்கள் இருவரும் தொடர்ந்து தங்களது சினிமா கேரியரில் கவனத்தை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜோதிகா குறித்து தற்போது நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் ஒரு கருத்தினை வெளியிட்டு பற்றி எரிய வைத்துள்ளார். அதில் அவர் ஜோதிகா தமிழ் சினிமாவில் ரஜினி கமல் என யாருடனும் நடிக்க தாயாராக இல்லை என கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாது கமலுடன் திரைப்படத்தில் நடித்துள்ள போதும் அவரை தனது திருமணத்திற்கு ஜோதிகா அழைப்பு விடுக்கவில்லை, அதற்கான காரணமும் தெரியவில்லை. இருப்பினும் கமலின் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரத்திற்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து அப்படி ஒரு கதாபாத்திரத்தில் சூர்யாவை நடிக்க வைத்து படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார் கமல்ஹாசன். ஆனால் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகும் எந்தப் படத்திலும் நடிக்கக் கூடாது என நடிகை ஜோதிகா நடிகர் சூர்யாவுக்கு தடை போட்டார். இதனால் உடனே அந்தப்படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் சூர்யா. இதன்காரணமாக கமல் தயாரிப்பில் உருவாக இருந்த அந்த படம் டிராப்பானது" என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார் .
Listen News!