• Sep 20 2024

பெற்றோருடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய ஜோதிகா... அட இவங்க தான் அம்மா, அப்பாவா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய பெண் நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. இவர் ஒரு காலத்தில் இளைஞர்கள் பலரின் மனங்களில் கனவுக் கன்னியாக வலம் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இவரது திரைப்பயணம் ஆனது 1999-ஆம் ஆண்டு 'வாலி' என்ற திரைப்படத்தின் மூலமே ஆரம்பமானது. 


இதனைத் தொடர்ந்து அவர் அடுத்தடுத்து தனது திரைப்பயணத்தில் பெரியளவில் வெற்றியையும் கண்டிருக்கின்றார். அதாவது பல முன்னணி நடிகர்களுடனும் இணைந்து 'குஷி, டும் டும் டும், தூள், திருமலை, மொழி, சந்திரமுகி, வேட்டையாடு விளையாடு' என ஏராளமாக வெற்றி படங்களைக் கொடுத்திருக்கின்றார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த போது சூர்யாவுடன் இணைந்து ஒரு சில காதல் படங்களில் நடித்திருக்கின்றார். இதனைத் தொடர்ந்து அவர்களது நிஜ வாழ்க்கையிலும் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது.


பின்னர் இருவீட்டாரினதும் சம்மதத்துடன் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். பின் இரண்டு குழந்தைகளை பெற்று அவர்கள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகே மீண்டும் சினிமாவில் நடிக்க வந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஜோதிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் அதிகம் வலம் வருகின்றன. அந்தவகையில் தற்போதும் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.


அதாவது ஜோதிகா இந்த வருட விநாயகர் சதுர்த்தியை தனது அம்மா-அப்பா குடும்பத்துடன் இணைந்து கொண்டாடியுள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரியளவில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement