தமிழில் முன்னணி நடிகரான சூர்யா தற்பொழுது தனது 41வது படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தினை இயக்குநர் பாலா இயக்கி வருகின்றார். இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்படப்பிடிப்பு கன்னியாகுமாரியில் நிறைவடைந்தது. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரை அல்லது கோவாவில் இன்னும் சில நாட்களில் தொடங்கப்படவுள்ளதாம்.
இப்படத்தில் சூர்யா அப்பா மகன் என இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம். இதில் மகன் சூர்யாவாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு கன்னியாகுமரியில் முடிந்துள்ளதாம். அதில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட படப்பிடிப்பு அப்பா கதாபாத்திரத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளதாம். அதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
Listen News!