செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்த காதல் கொண்டேன் படம் கடந்த 2003ம் ஆண்டு ரிலீஸாகி பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தில் செகண்ட் ஹீரோ ஆதியாக நடித்திருந்தார் சுதீப்.
காதல் கொண்டேன் படத்திற்கு பிறகு சுதீப்புக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதன் பிறகு அவரை தமிழ் ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே போனார்கள். இந்நிலையில் தான் சுதீப் டாக்சி ஓட்டும் புகைப்படம் வெளியாகி வைரலானது. அவர் காக்கிச் சட்டை, பேண்ட் அணிந்து டாக்சி ஓட்டுவதை பார்த்த ரசிகர்களோ, எப்படி இருந்த மனுஷனுக்கு இப்படியொரு பரிதாப நிலையா என பேச ஆரம்பித்து விட்டார்கள்.
ரசிகர்கள் பரிதாபப்படும் வகையில் சுதீப் டாக்சி எல்லாம் ஓட்டவில்லை. அவர் இன்னும் நடிகராகத் தான் இருக்கிறார். அவர் இந்தி மற்றும் பெங்காலி மொழி படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார். சுதீப் டாக்சி ஓட்டுவது போன்று வெளியான புகைப்படம் ஒரு விளம்பர படத்திற்காக எடுக்கப்பட்டது.
சுதீப் மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சுதீப்பை மீண்டும் தன் இயக்கத்தில் நடிக்க வைக்க வேண்டும் செல்வராகவன் என்பதே ரசிகர்களின் விருப்பம். அவர்களின் விருப்பத்தை செல்வராகவன் நிறைவேற்றி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!