• Sep 20 2024

தனம் பற்றிய உண்மை எல்லாம் தெரிந்ததால் முல்லையை கண்டபாட்டுக்கு திட்டிய கதிர்- அதிர்ச்சியில் உறைந்த மூர்த்தி Pandian Stores Serial

stella / 1 year ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

கதிர் அண்ணிக்கு என்ன ஆச்சு என்று மிரட்டி கேட்டதால் முல்லை, அண்ணிக்கு நெஞ்சில கான்சர் அதனால தான் பொய் சொல்லி திருச்சிக்கு கூட்டிட்டு போய் ஆப்பிரேஷன் பண்ணினோம் என்று சொல்கின்றார்.அதைக் கேட்ட கதிர் அதிர்ச்சியடைந்ததோடு முல்லையைத் திட்டுகின்றார். என்ன தான் நடந்திருந்தாலும் நீ பொய் சொல்லி இருக்கக் கூடாது அண்ணிக்கு ஏதாவது நடந்திருந்தால் யார் பதில் சொல்லியிருப்பாங்க, எங்க போய் இது பற்றி கேட்கிறது என்று சொல்லி திட்டுகின்றார்.


பின்னர் முல்லையுடன் வீட்டுக்கு கதிர் வரும் போது தனம் குழந்தைகளை தொட்டிலில் கிடத்தி துாங்க வைத்துக் கொண்டிருக்கின்றார்.தனத்தைப் பார்த்த கதிர் அழுவதோடு எதுக்காக இந்த விஷயத்தை சொல்ல வேணாம் என்று சொன்னீங்க என்று தனத்தின் கையைப் பிடித்து அழுகின்றார். அப்போது தனம் இந்த விஷயத்தை அண்ணன் கிட்ட மட்டும் சொல்லிடாத கதிர் என்கின்றார்.

தொடர்ந்து கதிரும் முல்லையும் வெளியில் இருந்து பேசிட்டு இருக்கும் போது கதிர் முல்லையிடம் என்ன தான் இருந்தாலும் நன் உன் கிட்ட கோபப்பட்டிருக்க கூடாது என்று முல்லையை சமாதானப்படுத்துகின்றார். அத்தோடு முல்லை இனி என்ன தான் நடந்தாலும் நான் உங்க கிட்ட பொய் சொல்ல மாட்டேன் என்று கூறுகின்றார்.


தொடர்ந்த விடிந்ததும் காலையில் சீக்கிரமாக எழும்பிய கதிர் பால் வாங்கிக் கொண்டு வர முல்லை நீங்க எப்போ எழும்பினீங்க, பாலைக் கொடுங்க என்று சொல்லகதிர் அதெல்லாம் வேணாம் நீ போய் துாங்கு என்று சொல்கின்றார். தொடர்ந்து மூர்த்தி தனக்கு காஃபி வேணும் என்று தனத்தை அழைக்க முல்லை தான் போட்டுக் கொணடு வாரேன் என்று கிளம்ப கதிர் காஃபி கொண்டு வந்து கொடுக்கின்றார். இதைப் பார்த்து மூர்த்தி அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.



Advertisement

Advertisement