நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்து வரும் போதே... தன்னுடைய நீண்ட நாள் நண்பரான, தொழிலதிபர் கெளதம் கிச்சுலு என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
2020 ஆம் ஆண்டு, இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்றையும் பெற்றெடுத்தார் காஜல். இவருடைய மகன் நீல் பிறந்து 6 மாதங்கள் ஆன பின்னர் மீண்டும் படப்பிடிப்பில் காஜல் கவனம் செலுத்தி வருகிறார்.
திருமணத்திற்கு பின்னர், படங்களில் பிசியாக இருந்தாலும்... பொறுப்பான மனைவியாகவும், அன்பான தாயாகவும் இருந்து அனைவரையும் ஆச்சரிப்படுத்தி வருகின்றார்.
இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது மகனுடன் மும்மை ஏர்போட்டிற்கு வந்திருக்கின்றார். இது குறித்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாவதையும் காணலாம்.
Listen News!