சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில்தான். மேலும் இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்
அத்தோடு சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை ,கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி.இதனைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குநரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார்.ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.
இந்நிலையில் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டாலும் காஜல் சாண்டியின் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் பேசியே வருகிறார்.அடிக்கடி அவர்களின் வீட்டிற்கும் சென்று வருகிறார்.இவ்வாறு இருக்கையில் அவர்களின் வீட்டிற்கு சென்று அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
இதோ அந்த பதிவு...
Listen News!