சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆங்கராக தனது பயணத்தை ஆரம்பித்து பல சீரியல்களிலும் திரைப்படங்களிலும் நடித்து பிரபல்யமானவர் தான் காஜல் பசுபதி. இவர் பிரபல நடன இயக்குநரான சாண்டி மாஸ்டரைக் காதலித்து திருமணம் செய்தார். இருப்பினும் சில காரணங்களால் அவரைப் பிரிந்து தனித்து வாழ்கின்றார்.
வெள்ளித்திரையில் பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் சன்டிவியில் ஒளிபரப்பாகும் கண்ணாண கண்ணே சீரியலில் நடித்து வந்தார். சோஷியல மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் காஜல் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிடுவதோடு ரீல்ஸ்களை ஷேர் செய்தும் வருகின்றார்.
இந்த நிலையில் சமீபத்தில் சின்னத்திரை நடிகை ஸ்ரீநிதி சிம்புடன் சேர்த்து வைக்கும்படி அவரின் வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு அடம்பிடித்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் சேர் செய்து இருந்தார்.பப்ளிசிட்டிக்காக தான் ஸ்ரீநிதி இதுபோன்று செய்து வருவதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், ஸ்ரீநிதி 10 வருடம் ஒருதலை காதல் என சிம்பு வீட்டுக்கு முன்பு நின்று கொண்டு வெளியிட்ட புகைப்படத்தை காஜல் பசுபதி தனது ஃபேஸ்புக்கில் பகிர்ந்து, “முடியாதுமூடிட்டு போடி” என்று கூறியுள்ளார். இந்த போஸ்டை பார்த்து ஷாக்கான ரசிகர்கள், காஜலிடம் ஏன் இவ்வளவு கோபம் என கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்:
- நடிகை ஐஸ்வர்யா ராய்யின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?- பங்களாவின் மதிப்பே இவ்வளவு பெறுமதியா?
- எனது 23 வயதில் அம்மா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்- நீண்ட பதிவினைப் போட்ட பிரபல சீரியல் நடிகை
- ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் என்ட்ரி கொடுத்த கமல்ஹாசன்- கண்கலங்கிய நபர்
- குடிநீர் போத்தல்களிலும் ஒட்டப்பட்ட விக்ரம் படத்தின் புகைப்படங்கள்- வித்தியாசமான ப்ரமோஷனாக இருக்கே
- ஹைதராபாத்தில் படப்பிடிப்பை முடித்து விட்டு சென்னை திரும்பிய தளபதி விஜய்- அடுத்த ஷுட்டிங் எங்கு தெரியுமா?
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!