தமிழ் சினிமாவில் சூப்பர்ஸ்டாராக கடந்த நாற்பது ஆண்டுகளாக வலம் வருபவர் ரஜினி. திரைவாழ்க்கையில் இவர் கண்டிராத வெற்றியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு படத்திற்கு படம் வெற்றிகளை குவித்து வந்த ரஜினி தற்போது ஒரு வெற்றிப்படத்திற்காக போராடி வருகின்றார்.
எந்திரன் படத்திற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வெற்றிபெறவில்லை. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் இப்படம் 550 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் குவிந்து இருக்கிறது.
இதை சன் பிக்சர்ஸ் நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது. மேலும் சூப்பர்ஸ்டார் ரஜினியை ரெக்கார்ட் மேக்கர் எனவும் தயாரிப்பு நிறுவனம் கூறி வருகிறது.இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிக்கு தயாரிப்பு நிறுவனம் செக் கொடுத்து இருக்கிறது.கலாநிதி மாறன் ரஜினியை சந்தித்து செக் கொடுத்து இருக்கும் போட்டோ தற்போது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!