• Sep 21 2024

நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படி கிடைத்து இருக்கு... அநீதி படத்தால் நெகிழ்ந்து பேசிய காலி வெங்கட்...

subiththira / 11 months ago

Advertisement

Listen News!

"அநீதி" இயக்குனர் வசந்தபாலாவின் இயக்கத்தில் வெளியாகிய  திரைப்படம் 'அநீதி'. இப்படத்தில் அர்ஜூன் தாஸ், துஷாரா விஜயன் ஆகியோருடன் இணைந்து வனிதா விஜயகுமார், பரணி, அர்ஜூன் சிதம்பரம், சுரேஷ் சக்கரவர்த்தி, ஷா ரா, சாந்தா தனஞ்ஜெயன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர்.


இப்படத்தில் தந்தை காதபாத்திரம் ஏற்று அருமையாக நடித்திருந்த நடிகர் காலி வெங்கட் தனக்கு வரும் பாராட்டுக்கள் தொடர்பில் நெகிழ்ந்து பேசியுள்ளார்.


முதலாளிகளால் உழைக்கும் வர்க்கத்தினருக்கு இழைக்கப்படும் அநீதிக்கு என்னதான் தீர்வு ,ஒருவித மனநோயால் பாதிக்கப்படும் அர்ஜூன் தாஸ், உணவு டெலிவரி பாயாக வரும் அவருக்கு  துஷாரா விஜயனுடன் எதிர்பாராத விதமாக ஏற்ப்படும் காதல்,  சற்றேனும் எதிர்பார்க்காத நேரத்தில் குற்ற வழக்கில் சிக்கிக் கொள்ளும் நடிகர். அதன்பின் இவர்கள் இருவரின் வாழ்க்கையிலும் நடந்தது என்ன என்பதையே இப்படம் சித்தரித்திருந்தது.


இப்படத்தில் தந்தை கதாபாத்திரம் ஏற்று நடித்திருந்த காலி வெங்கட். அநீதி திரைப்படம் தொடர்பாக தனக்கு வரும் பாராட்டுக்கள் குறித்து நெகிழ்ந்துபேசி  தந்து சமூகவலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்." திக்குமுக்கு ஆகும் அளவில் எல்லோரும் அநீதி படத்தை கொண்டாடுவது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு . எனக்கு இந்த வாய்ப்பை தந்த படக்குழுவினருக்கு நன்றி. 


நீண்ட நாட்களுக்கு பிறகு முன்னைய படங்களுக்கு   கிடைக்கும் ஆதரவு போல  இந்த படத்திற்க்கும் பேராதரவு வழங்கியதற்கு நன்றி. சோசியல் மீடியால உங்கள் கமென்ஸ் பாக்கும் போதும், என்க்கு கால் பண்ணி பேசும் போதும் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு எல்லாருக்கும் ரொம்ப நன்றி " என தனது டுவிட்டர் வலைதளத்தில் ரொம்ப மகிழ்ச்சியாக பேசி வீடியோ பதிவிட்டுள்ளார் நடிகர் காலி வெங்கட்.  

Advertisement

Advertisement